பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.
இதில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போதைய மக்களவை உறுப்பினர் பழநிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள், தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே, போலீசார் முன் அனுமதி இல்லாமல் டி.ஆர்.பாலுவின் உருவ மொம்மை எரித்தும், அவரது படத்தை அவமதித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ள வேட்பாளரை உடனே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை ஒன்றிய அவைத் தலைவர் சோமு உட்பட 75 பேர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.