சீட்டு கிடைக்காது என்று முன்பே தெரிந்து கொண்ட சுனா பானா (சு.பழனிமாணிக்கம்), அரசியலில் இருந்து விலகுகிறார் பழனிமாணிக்கம்?
மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான சு.பழனிமாணிக்கத்திற்கு இந்த முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தராததால் அவரது ஆதரவாளர்கள் டி.ஆர்.பாலுவின் படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள், ஆனால் சுனா பானா என்றழைக்கப்படும் பழனிமாணிக்கம் அவர்களுக்கு முன்பே இந்த தகவல் தெரிந்திருந்தது.
டி.ஆர்.பாலுவுக்கு தஞ்சாவூர் தொகுதியிலும் பழனிமாணிக்கத்திற்கு மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட மேல்மட்ட நிலையில் பஞ்சாயத்து பேசி முடிவெடுத்திருந்த நிலையில் திமுக தலைமை மயிலாடுதுறை தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாத நிலையில் இருக்கும் பழனிமாணிக்கம் அரசியலை விட்டே விலகும் முடிவிற்கு வந்துள்ளார், தஞ்சாவூரில் இருந்த சொத்துபத்துகளை எல்லாம் பெருமளவில் விற்றுவிட்டு சென்னையில் முதலீடாக்கியுள்ள பழனிமாணிக்கம் மொத்தமாக அரசியலில் இருந்து விலகி சென்னையில் செட்டிலாகும் முடிவில் உள்ளதாக அவரது ஆதரவு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. அவரது தம்பி ராஜ்குமாரும் அரசியலில் இருந்து ஒதுங்காமல் அண்ணனின் பணியை தஞ்சாவூரில் தொடர வேண்டும் என்பது தான் பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.
மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான சு.பழனிமாணிக்கத்திற்கு இந்த முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தராததால் அவரது ஆதரவாளர்கள் டி.ஆர்.பாலுவின் படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள், ஆனால் சுனா பானா என்றழைக்கப்படும் பழனிமாணிக்கம் அவர்களுக்கு முன்பே இந்த தகவல் தெரிந்திருந்தது.
டி.ஆர்.பாலுவுக்கு தஞ்சாவூர் தொகுதியிலும் பழனிமாணிக்கத்திற்கு மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட மேல்மட்ட நிலையில் பஞ்சாயத்து பேசி முடிவெடுத்திருந்த நிலையில் திமுக தலைமை மயிலாடுதுறை தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாத நிலையில் இருக்கும் பழனிமாணிக்கம் அரசியலை விட்டே விலகும் முடிவிற்கு வந்துள்ளார், தஞ்சாவூரில் இருந்த சொத்துபத்துகளை எல்லாம் பெருமளவில் விற்றுவிட்டு சென்னையில் முதலீடாக்கியுள்ள பழனிமாணிக்கம் மொத்தமாக அரசியலில் இருந்து விலகி சென்னையில் செட்டிலாகும் முடிவில் உள்ளதாக அவரது ஆதரவு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. அவரது தம்பி ராஜ்குமாரும் அரசியலில் இருந்து ஒதுங்காமல் அண்ணனின் பணியை தஞ்சாவூரில் தொடர வேண்டும் என்பது தான் பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.