வெடிகுண்டு சம்பவங்களில் ஈராக் மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இந்தியா உள்ளதாகவும், குண்டுவெடிப்புகளில் ஆப்கானிஸ்தானைவிட இந்தியாவில் அதிகம் பேர் இறந்துள்ளதாகவும் தேசிய வெடிகுண்டு புள்ளி விவரங்கள் மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 2013-ம் ஆண்டில் 212 முறை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 130 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 466 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் உலகில் 75 சதவிகித குண்டுவெடிப்புகள் பாகிஸ்தான், ஈராக் மற்றும் இந்தியாவில் நடந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.