2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு மேலும் 9 மாதம் அவகாசம் அளித்துள்ளது . இதன் மூலம் வரும் 2015 ஜனவரி 1-ம் தேதி வரை, 2005-க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ்ப் பகுதியில். அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப் பட்டிருக்காது. அத்தகைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், அவற்றை ஏப்ரல் 1-ம் தேதி முதல் புழக்கத்துக்கு விடப்போவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 22-ம் தேதி அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கை பண மதிப்பைக் குறைக்கும் பொருட்டோ, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டோ எடுக்கப்பட்டதல்ல என்று அவர் தெரிவித்து இருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.