கடந்த 13ம் தேதி, சென்னையில் உமா மகேஸ்வரியை, மேற்கு வங்காள கட்டிட தொழிலாளர்கள் கொடூரமாக கொலை செய்தனர்.
ஒ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆந்திரா, பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பகுதியில் தங்கி உள்ளனர். மது, புகையிலை, பான்மசாலா பயன்படுத்தும் வழக்கம் அதிகம் உள்ள இவர்கள், பகலில் கட்டிட வேலையும், இரவில் திருட்டு, வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
கேளம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வரும் நகை-பணம் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால், போலீசாரின் சந்தேகப்பார்வை தற்போது வெளிமாநில கூலி தொழிலாளர்கள் மீது திரும்பி உள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி விஜயகுமார், இரவு 10 மணிக்கு மேல் சாலையில் நடந்து செல்லும் வெளிமாநில தொழிலாளர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களை பற்றிய தகவல்கள் மற்றும் கைரேகைகளை பதிந்து அனுப்பி வைக்கும்படி கேளம்பாக்கம், தாழம்பூர், திருப்போரூர் ஆகிய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 140 பேரிடம் இதுவரை கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என நினைத்தால், லைக் போடுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.