ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவருக்கு, துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருதை வழங்கை அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மனித உரிமை, பெண்கள் சம உரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்காக வழங்கப்படுகின்ற இவ்விருதை, அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2005-ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண் புதுடெல்லியின் பரபரப்பான கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அதில் அவருடைய முகம் நிரந்தரமாக விகாரமானது. அதன் பிறகு, சமூகத்தில் இருந்து ஓடி ஒளியாமல், ஆசிட் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அதற்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இதுதொடர்பாக தேசிய தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய அவர், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், மக்களவையில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.