சென்ற மாதம் 13-ம்தேதி டெல்லியிலிருந்து, சிகாகோ செல்லும் நீண்ட தூர விமானம் ஒன்று நான்கு பணிப்பெண்களின் வருகைக்காகக் காத்திருக்க நேரிட்டது. விமானம் கிளம்ப வேண்டிய நேரத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக ஒரு ஊழியர் வந்துசேர, மற்றொருவரோ அருகிலுள்ள துபாய் போன்ற நகரங்கள் வரையிலுமே தன்னால் பறக்க முடியும் என்று கூறியுள்ளார். மீதி இரண்டு பேர் பணிக்கே வரவில்லை. இதனால் பயணிகள் காத்திருக்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் நான்கு பேரையும் ஏர் இந்தியா நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது.
கடந்த 20-ம்தேதி விமான ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பணிகளைத் துவங்கவில்லை என்றால் அவர்கள்மீது வேலைநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற அறிக்கையை ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியது. தங்களின் அரசியல் பின்புலத்தை பயன் படுத்திக் கொண்டு பெரும்பான்மையான ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று குறிப்பிட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த முறையும் இதுபோல் அலட்சியமாகச் செயல்பட்ட 5,6 பேரை கடந்த ஞாயிறன்று நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.
ஏர் இந்தியாவின் அதிரடி நடவடிக்கையை நீங்கள் வரவேற்பதென்றால், லைக் செய்யுங்கள்!
கடந்த 20-ம்தேதி விமான ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பணிகளைத் துவங்கவில்லை என்றால் அவர்கள்மீது வேலைநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற அறிக்கையை ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியது. தங்களின் அரசியல் பின்புலத்தை பயன் படுத்திக் கொண்டு பெரும்பான்மையான ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று குறிப்பிட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த முறையும் இதுபோல் அலட்சியமாகச் செயல்பட்ட 5,6 பேரை கடந்த ஞாயிறன்று நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.
ஏர் இந்தியாவின் அதிரடி நடவடிக்கையை நீங்கள் வரவேற்பதென்றால், லைக் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.