BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 4 March 2014

ஏப்ரல் 1 முதல், தபால் நிலையங்களில் இருக்கும் வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் உயர்வு


தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு நிதியாண்டும் மாற்றியமைக்கப் படுகின்றன. 2014-15ம் நிதியாண்டுக்கான சில வைப்பு தொகைகளுக்கு வட்டி அதிகரிக்கப் பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு வருட வைப்பு நிதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 8.2 சதவீத வட்டி, இனி 8.4 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதியும் 8.4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 5 வருட வைப்பு நிதிக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்படும். வருங்கால வைப்பு நிதி (8.7) உள்ளிட்ட பிற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் (4 சதவீதம்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த வட்டி உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media