தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார் மு.க.அழகிரி. அப்பொழுது அவர் டி.ஆர்.பாலுவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தந்தை ஷாஜகானை சிறை வைத்து அவரது மகன் அவுரங்கசீப் ஆட்சியை பிடித்தார். அது போல தி.மு.க. தலைவர் கருணாநிதியை சிறை வைத்து அவரது பதவியை பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.
2009 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வில் நானும் பழனிமாணிக்கம் உள்பட பலரும் வெற்றி பெற்று எம்.பி. ஆனோம். மத்திய மந்திரிகளானோம். எங்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு வெளியேற்றி விட்டனர். இதில் டி.ஆர்.பாலுவுக்கு பெரும் பங்கு உள்ளது.
டெல்லியில் சுமூக உறவை ஏற்படுத்த தயாநிதிமாறன் செயல்பட்டார். ஆனால் டி.ஆர்.பாலு பிரிக்கவே முயற்சி செய்தார். அவர் செய்த தவறுகளால் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க முடியாது என்று பிரதமர் கூறிவிட்டார். தங்களுக்கு பதவி இல்லாததால் நேரம் பார்த்து மத்தியில் தி.மு.க. மந்திரிகளாக இருந்தவர்களின் பதவியை பறித்து விட்டனர்.
ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் முடிவு தெரிவிப்பதற்குள் டி.ஆர்.பாலு போன்றவர்கள் தி.மு.க. தலைவரிடம் தவறான தகவல்களை தெரிவித்து தி.மு.க. மந்திரிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்ய வைத்தனர். இந்த முடிவு மத்திய மந்திரியாக இருந்த எனக்கே தெரியாது.
தி.மு.க. உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர் ஆக முடியாமல் டி.ஆர்.பாலு தகிடுதத்தம் செய்தார். அவரால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் எப்படி ஜெயிக்க முடியும்? டி.ஆர்.பாலு 10 கப்பல்களுக்கு சொந்தக்காரர்.
ஸ்ரீபெரும்புதூரை விட்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் ஏன் போட்டியிடுகிறார். மன்னார்குடி சட்டசபை தொகுதியில் மகன் இருப்பதால் இங்கு ஜெயிக்கலாம் என டி.ஆர்.பாலு நினைக்கிறாரா? எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினாரோ தெரியவில்லை.
பழனிமாணிக்கத்துக்கு ‘சீட்’ கிடைக்காமல் செய்துவிட்டார். அவருக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கட்சி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் வேறு யாருமே இல்லையா? அவர்களுக்கு ‘சீட்’ கொடுத்திருக்கலாம்.
கட்சியில் இருந்து நாம் நீக்கப்பட்டு இருக்கோம். எனவே நாம் தலை நிமிர வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். இது குறித்து சிந்தித்து செயல்படவேண்டும்.
இவ்வாறு அழகிரி கூறியிருந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தந்தை ஷாஜகானை சிறை வைத்து அவரது மகன் அவுரங்கசீப் ஆட்சியை பிடித்தார். அது போல தி.மு.க. தலைவர் கருணாநிதியை சிறை வைத்து அவரது பதவியை பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.
2009 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வில் நானும் பழனிமாணிக்கம் உள்பட பலரும் வெற்றி பெற்று எம்.பி. ஆனோம். மத்திய மந்திரிகளானோம். எங்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு வெளியேற்றி விட்டனர். இதில் டி.ஆர்.பாலுவுக்கு பெரும் பங்கு உள்ளது.
டெல்லியில் சுமூக உறவை ஏற்படுத்த தயாநிதிமாறன் செயல்பட்டார். ஆனால் டி.ஆர்.பாலு பிரிக்கவே முயற்சி செய்தார். அவர் செய்த தவறுகளால் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க முடியாது என்று பிரதமர் கூறிவிட்டார். தங்களுக்கு பதவி இல்லாததால் நேரம் பார்த்து மத்தியில் தி.மு.க. மந்திரிகளாக இருந்தவர்களின் பதவியை பறித்து விட்டனர்.
ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் முடிவு தெரிவிப்பதற்குள் டி.ஆர்.பாலு போன்றவர்கள் தி.மு.க. தலைவரிடம் தவறான தகவல்களை தெரிவித்து தி.மு.க. மந்திரிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்ய வைத்தனர். இந்த முடிவு மத்திய மந்திரியாக இருந்த எனக்கே தெரியாது.
தி.மு.க. உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர் ஆக முடியாமல் டி.ஆர்.பாலு தகிடுதத்தம் செய்தார். அவரால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் எப்படி ஜெயிக்க முடியும்? டி.ஆர்.பாலு 10 கப்பல்களுக்கு சொந்தக்காரர்.
ஸ்ரீபெரும்புதூரை விட்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் ஏன் போட்டியிடுகிறார். மன்னார்குடி சட்டசபை தொகுதியில் மகன் இருப்பதால் இங்கு ஜெயிக்கலாம் என டி.ஆர்.பாலு நினைக்கிறாரா? எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினாரோ தெரியவில்லை.
பழனிமாணிக்கத்துக்கு ‘சீட்’ கிடைக்காமல் செய்துவிட்டார். அவருக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கட்சி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் வேறு யாருமே இல்லையா? அவர்களுக்கு ‘சீட்’ கொடுத்திருக்கலாம்.
கட்சியில் இருந்து நாம் நீக்கப்பட்டு இருக்கோம். எனவே நாம் தலை நிமிர வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். இது குறித்து சிந்தித்து செயல்படவேண்டும்.
இவ்வாறு அழகிரி கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.