தஞ்சையிலிருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சியில் ஒரு ஓட்டலுக்கு உணவருந்த சென்றிருந்தார்,மு.க. அழகிரி. அதை பற்றி தகவல் அறிந்த, திருச்சி செய்தியாளர்கள் அழகிரியை சந்திக்க விரைந்தனர். உணவருந்திவிட்டு புறப்படத் தயாரான அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருச்சியில் திமுக வெற்றி பெறுமா என எனக்கு எப்படித் தெரியும்?. நான் தான் திமுக-விலேயே இல்லையே. என்னை திமுகவில் இருந்து நீக்கியது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் எனக்கு வர வில்லை. வைகோ, எம்.ஜி.ஆர் ஆகி யோரைக் கட்சியிலிருந்து நீக்கிய போது முறைப்படி அவர்களுக்கு எழுத்துப் பூர்வமான கடிதம் அனுப்பினார்கள். எனக்கு இதுவரை அப்படியொரு கடிதம் வரவில்லை. கடிதம் வந்தால்தான் நான் அதை எதிர்த்து வழக்கு தொடருவது பற்றி முடிவு செய்ய முடியும்.
திமுக-விலிருந்து என்னை நீக்கியவர்கள் எம்.பி-க்கள் ரித்தீஷ், நெப் போலியன் ஆகியோரை ஏன் நீக்க வில்லை என திமுக-வினரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்றார்.
திருச்சியில் திமுக வெற்றி பெறுமா என எனக்கு எப்படித் தெரியும்?. நான் தான் திமுக-விலேயே இல்லையே. என்னை திமுகவில் இருந்து நீக்கியது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் எனக்கு வர வில்லை. வைகோ, எம்.ஜி.ஆர் ஆகி யோரைக் கட்சியிலிருந்து நீக்கிய போது முறைப்படி அவர்களுக்கு எழுத்துப் பூர்வமான கடிதம் அனுப்பினார்கள். எனக்கு இதுவரை அப்படியொரு கடிதம் வரவில்லை. கடிதம் வந்தால்தான் நான் அதை எதிர்த்து வழக்கு தொடருவது பற்றி முடிவு செய்ய முடியும்.
திமுக-விலிருந்து என்னை நீக்கியவர்கள் எம்.பி-க்கள் ரித்தீஷ், நெப் போலியன் ஆகியோரை ஏன் நீக்க வில்லை என திமுக-வினரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.