BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 April 2014

எங்களை திமுக கட்சியினர் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகின்றனர்- கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரக்தி

கடலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளை அதிகமாக கண்டுகொள்ளாமல் இருப்பதால் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தாமரைச்செல்வனிடம் இது குறித்து கேட்டபோது, "எங்களை திமுக- வினர் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகின்றனர். இது ஏன் என்பது புரியவில்லை. கடலூரில் எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், திமுக தரப்பிலிருந்து இதுவரை பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. அதிமுக-வினர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள். இவர்கள் இதுவரை எதிலும் ஆர்வம் காட்டவில்லை." என்று பதிலளித்தார்.

இதைப் பற்றி கேட்ட போது, திமுக வட்டாரங்களில் கூறப்படுவது என்னவென்றால், அவர்களை அழைத்துக் கொண்டு சென்றால் கிராமப்புறங்களில் கிடைக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச ஓட்டுகளும் கிடைக்காமல் போய்விடும். அக்கட்சியின் மாவட்ட முக்கியப் பிரமுகர் மீது மாவட்டம் முழுக்க அதிருப்தி நிலவுவதே இதற்குக் காரணம். மேலும், அவர்கள் எதையோ எதிர்பார்த்தே வருகிறார்களே தவிர, களப்பணிக்காக வருவதாகத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களாகவே வந்தால் வரட்டும் என்ற மனப்பான்மையில் நாங்களும் செயல்படுகிறோம்’’ என்று கூறுகின்றனர். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media