BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 April 2014

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக விலக்கு அளித்த நீதிபதி

தமிழக முதலமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 5-ம் தேதி (சனிக்கிழமை)  ஜெயலலிதா நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஜெயலலிதா ஆஜராகும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சிரமமாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காலையில் தான் அளித்த தீர்ப்பை பிற்பகலில் மாற்றி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டார்.  அவர் எப்போது ஆஜராக வேண்டும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவ்வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 5-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media