கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சவாரா பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.
கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது பிரேதத்தை பரிசோதித்த மருத்துவர்கள், மயக்க நிலைக்கு செல்லும் முன்னர் அந்த மூதாட்டி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க அந்த மூதாட்டி வசித்து வந்த வீட்டின் அருகே விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.