BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 May 2014

தந்தையின் திருமணத்திற்கு முழு ஆதரவு- திக்விஜய் சிங் மகன் ஜெயவர்தன்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் (வயது 67), தனக்கும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் அமிருதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக டிவிட்டரில் புதன்கிழமை தெரிவித்திருந்தார். அமிருதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டிருப்பதாகவும், அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் திக்விஜய் சிங் கூறியிருந்தார். இது குறித்து அவரது மகன் ஜெயவர்தன் கூறுகையில், "எனது தந்தை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட விவகாரம். இதுதொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. எனினும், எனது தந்தைக்கு முழு ஆதரவு உண்டு" என்றார்.

ஜெய்வர்தன், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரகோகார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில்தான் திக்விஜய் சிங் கடந்த 1977-ம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media