சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான ஸ்வாதியின் உடல் நேற்று இரவு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் டி.சி.எஸ். பெங்களூரில் பணி புரிந்து வந்தார். அவரது உடலைப் பெறுவதற்காக, நேற்று மாலையில் தந்தை ராமகிருஷ்ணனும், தாயார் காமாட்சி தேவியும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனை பிண வறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்வாதியின் உடலை பார்த்து அவர்கள் கதறியழுதனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஸ்வாதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணக்கோலம் காண சில தினங்களே இருந்த நிலையில் மகள் இறந்ததை எண்ணி அவரது பெற்றோர் துக்கத்தில் கதறி அழுதனர். பின்னர், ஸ்வாதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பெங்களூரில் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்த ஸ்வாதி, முதல் மாத ஊதியத்தில் தனது பாட்டிக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டு திருமணக் கனவுகளுடன் புறப்பட்ட அவருடைய எதிர்பாராத மரணம், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.