BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 May 2014

மோடியை போல நான் உண்மையை மறைக்கவில்லை: திக்விஜய்சிங் பேச்சு

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்குக்கும் , பெண் நிருபர் அமிர்தா ராய்க்கும் தொடர்பு உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அமிர்தா ராயுடன் உள்ள தொடர்பை ஒப்புக் கொள்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக திக்விஜய் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில்," "நான் எனது சொந்த வாழ்க்கையை மறைக்கவில்லை, மோடி தான் அவரது சொந்த வாழ்க்கையை 30 ஆண்டு காலமாக மறைத்து அரசியல் செய்துள்ளார். எனக்கு எதையும் சந்திக்கும் தைரியம் இருக்கிறது. நான் அம்ருதா ராயை, அவரது விவாகரத்திற்கு பின் திருமணம் செய்வேன்".

மேலும் அவர், "தற்போது நடக்கும் தேர்தல் சாதாரண‌ மக்களுக்கும் பெரும் முதலாளிகளுக்குமான போட்டி.  உணவு பாதுகாப்பு மசோதாவை எதிர்த்த பெரு நிறுவனங்கள் தான் தற்போது மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றன" என்றார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media