BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 May 2014

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் கேஜ்ரிவாலுக்கு நிதிஷ்குமார் ஆதரவு


வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

மோடியை எதிர்க்கும் விதமாக கேஜ்ரிவாலுக்கு ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்த ஐக்கிய ஜனதா தளம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூட்டணியில் இருந்து விலகி இருந்தது.

வாரணாசியில் மோடியை தோற்கடிக்கும் விதமாக கேஜ்ரிவாலுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதை அந்த கட்சியின் தலைவர் சரத்யாதவ், பொதுச்செயலாளர் தியாகி தெரிவித்து உள்ளனர். கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்வார் என்று ஆம்ஆத்மி கட்சி கருதுகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media