சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு புதிய மீட்டர் கட்டணம் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி குறைந்தபட்ச கட்டணம் (1.8 கிலோ மீட்டர் தூரம்) ரூ. 25, அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாயும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ. 3.50 (1 மணி நேரத்துக்கு 42 ரூபாய்) என்று நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.
இந்த கட்டணத்தை வசூலிக்காத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்ததுடன் சோதனை நடத்த 50 குழுக்களும் அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய சோதனையில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் பிடிபட்டது. பின்னர் இவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தியாக ராயநகர், கே.கே.நகர், அசோக் நகரில் நேற்று ஆட்டோக்களை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 35 ஆட்டோக்கள் பிடிபட்டது. இதையடுத்து 35 ஆட்டோக்களின் பெர்மிட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கட்டணத்தை வசூலிக்காத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்ததுடன் சோதனை நடத்த 50 குழுக்களும் அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய சோதனையில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் பிடிபட்டது. பின்னர் இவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தியாக ராயநகர், கே.கே.நகர், அசோக் நகரில் நேற்று ஆட்டோக்களை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 35 ஆட்டோக்கள் பிடிபட்டது. இதையடுத்து 35 ஆட்டோக்களின் பெர்மிட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.