BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 25 June 2014

எதிரணி வீரரை நாய் மாதிரி கடித்து வைத்த ஸ்வாரசு, எதுக்குடா இந்த மானம்கெட்ட பொழப்பு !!


உருகுவே அணியின் நட்சத்திர வீரர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் ஸ்வாரஸ் . இவர் கோல் அடிப்பதில் சிறந்த வீரர் தான் ஆனால் நேர்மையாகவும் , ஒழுக்கமாகவும் விளையாடிகிறாறா என்றால் உறுதியாக கூறலாம் இல்லை என்று. நேற்று நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பின்கள வீரர்  சேலானி என்பவரை கடித்து வைத்து விட்டார். 

அவர் வேறு ஒரு வீரரை கடித்து வைப்பது இது முதல் முறை அல்ல ,இது மூன்றாவது முறையாகும். இவர் இது போல பல சர்ச்சைகளில்  சிக்கி உள்ளார். 2010 உலக கோப்பையின் போது கானா வீரர் அடித்த பந்தை இவர் கையால் தடுத்து விட்டார். இதனால் அது கோல் ஆக வில்லை என்பதால் கானா அணி சோகத்துடன் வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு 2011 இல் ஆட்டத்தின் போது இனவெறியை தூண்டியதற்காக 8 ஆட்டங்களுக்கு தடை செய்யப்பட்டார். பிறகு 2013 இல் செல்சீ அணி வீரர் இவானோவிக்கை கடித்ததிற்காக 10 ஆட்டங்களுக்கு தடை செய்யப்பட்டார். இப்போது மீண்டும் ஒரு கேவலமான செயல் .  இவருக்கு வாழ்நாள் தடை விதிப்பதே இதற்கு சிறந்த முடிவாகும்.

யாரும் ஸ்வாரசின் ரசிகர்கள் என்று கூற வேண்டாம், ஏனென்றால் அதுவும் ஒரு கேவலமான செயல் தான். ரோனால்டோ , மெஸ்ஸி ஆகியோர் இன்னும் சிறந்த வீரர்களாக இருப்பதற்கு முக்கிய  காரணம் அவர்கள் சிறப்பாக ஆடுவதால்  மட்டும் இல்லை நேர்மையும் ஒழுக்கமும் தெரிந்தவர்கள். சச்சின் ,டிராவிட், தோனி என நேர்மையான வீரர்களை ஆதரித்த நாம் இவனை போன்ற கேவலமானவனை ஆதரிக்க கூடாது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media