BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 25 June 2014

காண்டமும் சிறந்தது தான் : மோடி அமைச்சர் பேச்சு

நாம் எய்ட்ஸ் நோயை காண்டத்தினால் ஒழிக்க கூடாது, கணவன் மனைவி இருவருக்கும் உள்ள நேர்மை அதிகரிக்க வேண்டும் . எய்ட்ஸ் நோயை அழிக்க நாம் காண்டம் பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க கூடாது . இது காண்டம் பயன்படுத்தி தவறான உற்வுகளில் ஈடுபடலாம் என்ற தவறான கருத்தை மக்களிடம் சேர்க்கிறது என்று கூறி இருந்தார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் .

எய்ட்ஸ் நோயை ஒழிக்க காண்டம் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை இது அழித்துவிடும் என்று அவரது இந்த கருத்திற்க்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது,

அவரிடம் இன்று செய்தியாளர்கள் இது குறித்து கேட்ட போது தான் கூறியது அனைவரும் தவறாக புரிந்து கொண்டதாக கூறினார். அவர் சொன்னது என்னவென்றால் காண்டமும் பாதுகாப்பானது தான் ஆனால் அதை விட கணவன் மனைவி இடையே உள்ள நேர்மை தான் அதை விட சிறந்த பாதுகாப்பு ஆகும் . அதுவே இதனை அழிப்பதற்கான நிரந்திர தீர்வு ஆகும் என்றார் .

என்ன சரி தானே மக்களே . இவர் அந்த விஷயத்திற்கு சரிபட்டு வரமாட்டார் என்று உள்மனதில் நினைகிறீர்களா ??


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media