BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 25 June 2014

வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மோடி, டிவிட்டரில் தொடர்ந்து முன்னேற்றம்

வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மோடி, டிவிட்டரில் தொடர்ந்து முன்னேற்றம்

டிவிட்டர் இணையதளத்தை இப்போது உள்ள தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் . இதில் இந்தியாவில் அதிகம் பேர் பின் தொடரும் நபர் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இவரை இது வரை 4.9 மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இது அமெரிக்காவின் கோட்டையான வெள்ளை மாளிகையை பின் தொடருபவர்களை விட அதிகம் . இது ஒரு சாதனையாக பார்க்கபடுகிறது. 

உலகில் உள்ள தலைவர்களில் அதிகம் பேர் பின் தொடரும் நபர் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா ஆவார். இவரை 43 மில்லியன் நபர்கள் பின் தொடருகிறார்கள் . இவருக்கு அடுத்த படியாக போப் பிரான்சிஸ் இருக்கிறார் , அடுத்த இடத்தில் இந்தோனேசியா பிரதமர் உள்ளார். இதில் மோடி 4 வது இடத்தில் இருக்கிறார். பிரதமராவதற்கு முன் 6 வது இடத்தில் இருந்தார்.


டிவிட்டரில் யார் முன்னிலை வகிக்கிறார் என்பதை ஒரு தேசத்தின் பெருமையாகவே பார்க்கிறார்கள்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media