BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 June 2014

அமெரிக்க காங்கிரஸின் கூட்டுத் தொடரில் மோடியை உரையாற்ற அழைப்பு !!


ஒரு காலத்தில் அமெரிக்காவில் உள்ளே  நுழைய விசா கொடுக்காமல் இருந்த அமெரிக்கா , இப்போது மோடியை கூட்டுத் தொடரில் உரையாற்ற வைத்து மரியாதை செய்ய அழைத்துள்ளனர் .

இது குறித்து வெளியுறவுத்துறை தலைமை அதிகாரி , அவையின் தலைமை அதிகாரி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் மோடியை அவைகளின் கூட்டுத் தொடரில் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . மேலும் அரசியல் , பொருளாதாரம் , பாதுகாப்பு எதுவாக இருந்தாலும் மத்திய ஆசியாவில் அமெரிக்காவிற்கு சிறந்த நட்பு நாடு இந்தியா “ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் .

மோடி தேர்த்லில் வெற்றி பெற்ற உடன் அமெரிக்க அதிபர் தொலைப்பேசியில் அழைத்து மோடியை வாழ்த்தி அமெரிக்காவிற்கு வருகை தரும்படி கேட்டுக் கொண்டார் .

இது போன்ற கூட்டுத் தொடரில் உரையாற்ற , மற்ற நாடுகளின் முக்கிய தலைவர்களை அளிக்கும் வழக்கம் 1800 ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது ..



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media