மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், "மத்தியில் மாற்று அரசு அமைய வேண்டும் என்று மக்களிடம் இருந்த தாக்கமே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம்." என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங் களின் மூலம் மக்களுக்கு ஏராள மான பலன்கள் கிடைத்துள்ளன. மக்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை இனி ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கான கோட்பாடுகளை, காங்கிரஸ் உயர்நிலைக் குழு உருவாக்கும். அதன்மூலம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் பலமான இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்கும். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் ஒருசேர இயக்கப் பணிகளை திறம்பட மேற்கொண்டு கட்சிக்கு வலு சேர்க்க வேண்டும். அதுதான் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.