BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 June 2014

மதநம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் எந்த மதத்தினரையும் புண்படுத்தமாட்டார் கருணாநிதி- எஸ்.வி.சேகர்


இன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார், நடிகர் எஸ்.வி.சேகர். அப்போது, கிளி மூக்கு கொண்ட சுக பிரம்ம மகரிஷியும் மார்க்கண்டேயரும் அமர்ந்திருக்கும் புகைப்பட அட்டையை கருணாநிதியிடம் அவர் கொடுத்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது: முதன்முதலாக 1992-ல் கருணாநிதியிடம் சுக பிரம்ம மகரிஷியின் இந்த படத்தை அளித்தேன். இது யார் என்றார். ‘‘ஐயா, இவர் குபேரனுக்கே வெங்கடாஜலபதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்த சுக பிரம்ம மகரிஷி. அவர் மார்க்கண்டேயருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி இது’’ என்றேன்.

அதற்கு அவர், ‘‘இப்படி கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன செய்வாய்?’’ என்றார். ‘‘இதைவிட பெரிய மூக்குள்ள பெண்ணைப் பார்த்துவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறவும், சிரித்துவிட்டார். அவரை சந்திக்கும்போதெல்லாம் இந்த படத்தைக் கொடுப்பேன். அவரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார். அவர் பகுத்தறிவுவாதியாக, மதநம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் எந்த மதத்தினரையும் புண்படுத்தமாட்டார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media