உத்தர பிரதேச மாநிலத்தில், சில தினங்களுக்கு முன்பு தான், இரு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்வம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அடங்காத நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் நீதிபதி கற்பழிக்கப்பட்டு, நேற்று மயக்க நிலையில் கிடந்திருக்கிறார். அவர் பலத்த காயங்களுடன் காணப்பட்டார். அப்பெண் நீதிபதியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடைத்தது. நீதிபதியை கற்பழித்தவர்கள், அவரை கொல்வதற்காக, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்த சொல்லி வற்புறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நீதிபதியின் நிலை தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதால், சம்பவம் குறித்து மேலும் தகவல்களை அறியப்படவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.