BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 June 2014

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, தமிழக முதல்வர் பேசியது என்ன?


டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

"தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினேன்.

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இதற்கு, ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக, என்னிடம் பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்"

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media