BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 4 June 2014

பால் தாக்கரேயை பேஸ்புக்கில் கிண்டல்: முஸ்லிம் IT மேனேஜர் கொடூரமாய் அடித்துக்கொலை



புனேயில் மோஷின் சாதிக் சேக் என்ற 24 வயது இளைஞர் இரவுத் தொழுகை முடிந்து வீட்டிற்கு தன் நன்பருடன் திரும்பும் போது இந்து ராஷ்ட்ர சேனா என்ற இந்துத்துவ தீவர அமைப்பைச்சேர்ந்த 7 பேரால் கொடூரமாய் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

சாதிக் சேக் புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் IT மேனேஜராக வேலை பார்த்துவந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த ரியாஸ் தெரிவித்தாவது..சாதிக் சேக் இஸ்லாமியர் என்பதற்கு அடையாளமான தொப்பி அணிந்திருந்ததாலும், தாடி வைத்திருந்தாலும் வன்முறை கும்பல் அவரை தாக்கக்துவங்கியதாகவும், தான் உடனடியாய் ஓடிச்சென்று உதவிக்கு ஆட்களை கூட்டிவந்த போது சாதிக் சேக் காப்பாற்ற முடியாத அளவுக்கு கொடுமாய் தாக்கப்பட்டு கிடந்தார் எனவும் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு போலிஸ் வருவதற்குள் அந்த இந்துத்துவ கொலைக்கும்பல் தங்களது மோட்டார் சைக்கள், கட்டைகளை போட்டு விட்டு ஓடிவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து ராஷ்ட்ரிய சேனாவைச் சேர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் தலைவரையும் விசாரணைக்கு அழைத்த காவல் துறை அவரை இதற்கு முன்பு போடப்பட்ட வேறொரு கேசுக்காக கைது செய்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media