உலக நாடுகளிள்
அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வசதியை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்று
உள்ளது தைவான் அரசு. சுமார் 24 மில்லியன் மக்கள் தொகையை கொண்டது தைவான் நாடு. இவர்கள்
அனைவருக்கும் இலவசமாக இன்டெர்நெட் வழங்குவது என்பது எளிதான செயல் அல்ல .இதனை
சிறந்த செயல் திட்டம் மூலம் நடைமுறை படுத்தி உள்ளார்கள் .இதற்காக 2011 முதல்
உழைக்க தொடங்கினார்கள். அந்த நாட்டு
மக்கள் தங்கள் மொபைல் நம்பரை மட்டும் கொடுத்து இந்த வசதியை பெற்று கொள்ளலாம் .இதன்
வேகம் 1MBPS ஆகும் .
இந்த வசதியை
தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் தராமல், அவர்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலா
பயணிகளுக்கும் இலவசமாக தருகிறார்கள் .இது அந்த நாட்டில் சுற்றுலா வரும் மக்களின்
எண்ணிகையை அதிகமாக உயர்த்தி வருகிறது .சுற்றுலா பயணிகள் தங்கள் பாஸ்போட்டை
காண்பித்தால் இந்த வசதியை பெற்று கொள்ளலாம் .
இந்தியாவிலும்
இது போல பெங்களூரில் மட்டும் இந்த வசதியை எற்படுத்தி உள்ளார்கள். இது போல இலவசமாக
தராவிட்டாலும் , குறைந்த விலையில் தருவதற்கான முயற்சியிலாவது நமது அரசு கவனம்
செலுத்த வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.