BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 July 2014

மீண்டும் உயருகிறதா பஸ் கட்டணம் : பயத்தில் மக்கள் !!

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் தமிழக அரசு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழக அரசு பஸ் கட்டணத்தை கடந்த 2012 ஆண்டு உயர்த்தியது. திமுக அரசின் மிக மோசமான ஆட்சியால் அப்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் நிலை அதிமுக அரசுக்கு வந்தது. அவர்களை விலையை உயர்த்தினார்கள் . ஆனால் அதற்கு பிறகு டீசல் விலை பல முறை உயர்ந்து விட்டது. அதனால் தமிழக போக்குவரத்து துறைக்கு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.



அதனால் அந்த நஷ்டத்தை போக்குவதற்கு பஸ் கட்டணத்தை உயர்த்துவது வழி என நினைகிறார்கள். அடுத்த தேர்தல் வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் இதுவே அதற்கான சரியான தருணம் என்று எண்ணுகிறது. இதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானால் வரலாம்.

மோடி அரசு ரயில் டிக்கெட் விலையை உயர்த்திய போது ஜெயலலிதா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ரயிலில் பயணம் செய்யும் ஏழைகளுக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என்றார். பஸ்ஸில் மட்டும் என்ன பணக்காரர்களா பயணம் செய்கிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media