அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு நாளிதழ் நடத்திய கருத்துகணிப்பாக அடித்து கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். ஆனால் உண்மையான சூப்பர் ஸ்டார்கள் இங்கு உள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று 11 மாடி இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டு உயிருக்காக போராடி வருகிறார்கள் . அவர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று ஒரு கூட்டம் போராடி வருகிறது . அவர்கள் தான் நம் வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கள். அங்கு இருந்த சிலரிடம் பேசிய போது,அவர்கள் கூறியது,
கிரன்மோரி என்பவர் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்தவர், 6 மாதங்களுக்கு முன்பு தான் இதில் சேர்ந்தார். அங்கு இருந்தவர்களை உயிருடன் மீட்ட போது பெரும் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார்.கணேஷ் பாண்டியன் ,இவர் அம்பத்தூர் தீயணைப்பு துறையை சேர்ந்தவர். மக்களை காப்பாற்றாமல் அவர்களின் உடல்களை பார்க்கும் போது மிகவும் வேதனை அடைவதாக கூறுகிறார். மேகலா இவர் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர். இவர்கள் ஏற்றி சென்ற வண்டியில் இருந்த 3 பேரும் நலமாக உள்ளதால் இவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
சொந்தமோ,நண்பனோ யார் என்றே தெரியாமல் அவர்களை காப்பாற்ற துடிக்கும் இந்த ஹீரொக்களுக்கு தலை வணங்குகிறோம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.