BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 July 2014

சாமானிய மக்களுக்கு அடுத்த ஆப்பு , சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு !!



கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது . இதனால் மக்கள் பெரும் கவலையில் இருந்தனர் . அவர்களது கவலை தீரும் முன்னே இப்போது அடுத்த கவலை அவர்களை தாக்கியுள்ளது . மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது .

அது என்ன மானியம் இல்லாத சிலிண்டர் ??

ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் கிடைக்கும் . அதற்கு மேல் சிலிண்டர்கள் அனைத்தும் மானியம் இல்லாத அதன் விலையிலேயே கிடைக்கும் .

இப்போது மானியம் இல்லாத சிலிண்டர் விலை 16.50 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது . இதன்படி இப்போதைய சிலிண்டரின் விலை ரூ.924 . மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை கடந்த மாதம் 22 ரூபாய் குறைக்கப்பட்டது . இப்போது 16.5 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது . 6 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லாத சிலிண்டரின் விலை இப்போது தான் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் எரிபொருள் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media