BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 July 2014

சச்சின் யார் என்றே எனக்கு தெரியாது : மரியா ஷரபோவா அதிர்ச்சி தகவல் !!

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கபடுபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளார்கள் . அவர்கள் இவரை தெய்வமாக பார்ப்பவர்கள். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற போது உலகமே கண்ணீர் சிந்தியது. கிரிக்கெட்டில் இவர் செய்யாத சாதனைகளே இல்லை. அப்படிபட்டவரை தெரியாது என்று கூறி இருக்கிறார் டென்னிஸ் விளையாட்டில் நட்சத்திர வீராங்கனையாக இருக்கும் மரியா ஷரபோவா.



சச்சின் விம்பிள்டன் பார்பதற்காக அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்றார்கள். அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media