குஜராத்தில் உள்ள பிள்ளா என்னும் கிராமத்தில் பைதான் பாம்பு உண்ணும் உணவு நம்மை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. மானை போன்ற கொம்புகளுடன் உள்ள விலங்கு ஆன்டிலோப். இது சின்ன காளை மாடை போன்று இருக்கும். அந்த விலங்கு அந்த பாம்பு தனது உணவாக எடுத்துக் கொண்டு இருந்தது.
இதனை அங்கு இருந்த கிராம மக்கள் பார்த்து கொண்டு இருந்தனர்.மக்கள் கூடியதை பார்த்த அந்த பாம்பு விலங்கை சாப்பிடுவதை நிறுத்தியது. அது அங்கு இருக்கும் குழந்தைகளை சாப்பிட்டு விடுமோ என்று பயந்து அதனை கொல்ல முயன்றனர் . ஆனால் அதற்குள் அங்கு வந்த வனத்துறையினர் அவர்களை தடுத்து அந்த பைதானை எடுத்து சென்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.