சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி ஆவார். இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர். ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றி படங்கள் தந்தாலும் அதற்கு பின்பு வந்த அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்கள் அவருக்கு சரியாக போகவில்லை. இப்போது அவர் மெட்ராஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலைசுற்றல், வாந்தி , மயக்கம் ஆகியவை ஏற்பட்டது. இதனால் அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதில் அவருக்கு புட்பாய்சன் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. இப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.