மோடி அரசு ஆட்சி வருவதற்கு முன் அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் விரைவில் மீட்கப்படும் என கூறினார்கள். அவர்கள் இந்த விஷயத்தில் வேகமான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை . இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இன்று மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதம் நடந்த போது மத்திய நிதி அமைச்சர் இது பற்றி பேசினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என்றார். விரைவில் அவை மீட்கப்படும் என்றார். கருப்பு பணம் உள்ள வங்கிகளிடம் அதனை டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை வாங்கி வருகிறோம் , அதனை உடனடியாக உச்ச நீதிமன்றத்திடம் அளித்து வருவதாக கூறினார்.
கருப்பு பணத்தை மீட்டால் மட்டும் போதாது , அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.