இன்று இருக்கும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பிடித்த நடிகரை தெய்வமாக பார்க்கிறார்கள். ஆனால் அதே ரசிகர்களுக்கு சமமரியாதை கொடுக்கும் ஒரு நடிகர் யார் என்றால் அது நம்ம தல அஜித்தாகத்தான் இருக்கும். தன்னை பற்றி மட்டும் எண்ணாமல் தனது ரசிகர்களின் வாழ்க்கை பற்றியும் சிந்திப்பவர். அஜித் கடந்த மாதம் தான் பேஸ்புக்கிற்கு வந்தார். வந்த முதல் நாளே அவருக்கு நல்ல வரவேற்பு . ரசிகர்கள் கூட்டம் வளர தொடங்கியது.
ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை வந்த 2 வது நாளே தல பேஸ்புக்கில் இருந்து விலகிவிட்டார். அவரது பக்கத்தில் இருந்த வெரிஃபைடு டிக்கை காணவில்லை. அது இருந்தால் அந்த நபரின் உண்மையான பக்கம் என எடுத்து கொள்ளப்படும். அஜித் விலகியதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. தல எப்போது மீண்டும் வருவார் என அவரது ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.