இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்றால் அது தோனியாக தான் இருக்கும். இவர் இந்திய அணிக்காக எல்லா ஐசிசி கோப்பைகளையும் பெற்று தந்து விட்டார். டெஸ்ட் போட்டிகளிளும் இந்திய அணிக்கு முதல் இடத்தை பெற்று தந்தார். இப்படி பல சாதனைகளை கொண்ட தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வருகின்றன .
லார்ட்ஸ் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு வெற்றி குறித்து தோனியிடம் கேட்ட போது லார்ட்ஸில் அவர் விளையாடும் கடைசி ஆட்டமாக இது இருக்கும் என்றார். இது அவர் விரைவில் ஓய்வு அறிவிப்பை அறிவிக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இந்திய அணி இப்போது இருக்கும் நிலையில் அவர் ஓய்வு பெறுவது சரியான முடிவாக இருக்காது. இப்போது உள்ள இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட அணி ஆகும். அதனை வழிநடத்துவதற்கு தோனியை விட்டால் வேறு யாரும் இல்லை.
எனவே தோனியின் சேவை இந்தியாவுக்கு தேவை !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.