சூர்யா நாயகனாக நடித்து வரும் படம் அஞ்சான். இந்த படத்தை லிங்குசாம் இயக்குகிறார். சம்ந்தா நாயகியாக நடிகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த பாடத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜுலை 17 ஆம் தேதி அன்று பிராம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தில் பாடல் ஒன்றை பாட சூர்யா திட்டமிட்டு உள்ளார். வெள்ளிதிரையில் இது அவருக்கு முதல் பாட்டு ஆகும்.
என்வே ரஜினி,கமல்,விஜய்,தனுஷ்,சிம்பு,விஷாலை தொடர்ந்து சூர்யாவும் பாட தொடங்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. இந்த படம் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் படம். இப்போது சூர்யா வேறு பாட போகிறார் என்பதால் எதிர்பார்ப்பு கூடி உள்ளது.
நடிகர்கள் பாடுவதற்கு மாறி வருகிறார்கள், இசையமப்பாளர்கள் விஜய் ஆண்டோனி ,ஜீ.வி.பிரகாஷ் போன்றோர் நடிகராக மாறி வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.