தமிழ் சினிமாவில் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பவர்கள் யார் என்றால் அது விஜய், அஜித் ரசிகர்கள் தான். அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் எதிரிகளாகவே இருக்கிறார்கள். இதற்கு முற்றுபுள்ளி வைப்பது அவர்கள் கடமை ஆகும். அதற்கான வாய்ப்பும் கிடைத்து உள்ளது. விஜய் இப்போது நடித்து வரும் படம் கத்தி. இதில் ஒரு காட்சியில் முக்கியமான சினிமா பிரபலம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தார்கள். அதற்காக பாலிவுட் நட்சத்திரங்களை அனுகி, பிறகு ஏன் அஜித் நடிக்க கூடாது என்று எண்ணினார்கள். விஜய் இதற்கு சரி என்று சொல்லி விட்டார். தலயின் சம்மதத்துக்காக காத்து இருக்கிறார்கள். தனது ரசிகர்களின் நலன் விரும்பியாக இருக்கும் அஜித் இதற்கு சம்மதித்தால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்படலாம்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் அது நல்ல படமாக மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களுக்கு நல்ல பாடமாகவும் இருக்கும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.