சச்சின் விம்பிள்டன் பார்பதற்காக அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்றார்கள். அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.
ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அவரை கேவலமாக திட்டினார்கள். பேஸ்புக் டிவிட்டர் அதிகம் போட பட்ட பதிவு யார் இந்த ஷரபோவா ? அவரை கலாய்த்து பல ட்ரோல்கள் வந்த வண்ணம் உள்ளன.இது இந்தியர்கள் நம்மை நாமே அசிங்க படுத்தி கொள்வது போல் உள்ளது. இது நாம் வெட்க பட வேண்டிய செயல் ஆகும் . ஒரு ரஷிய நாட்டு வீரங்கனைக்கு சச்சினை பற்றி தெரியாததில் ஒன்றும் தப்பு இல்லை. அவர்கள் கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாதவர்கள். நமக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் தெரியாது. நமது நாட்டு ஹாக்கி,கால்பந்து அணிகளின் கேப்டன்கள் கூட தெரியாது. உண்மையில் நாம் தான் கேவலமானவர்கள்.
இப்படி இருந்தாலும் ஷரபோவாவுக்கு ஆதரவாகவும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நடுநிலமையுடன் பேசுவர்கள். இந்த விஷயத்தில் நமக்கு கவலை அளிப்பது சச்சின் இந்த விவகாரத்தில் தலையிடாதது. சச்சின் நினைத்து இருந்தால் இந்த விஷயம் பெரிதாகாமல் தடுத்து இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இனியாவது சச்சின் விரைந்து செயல்பட்டு இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மானம் காப்பாற்றப்படும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.