சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். இது கடந்த செவ்வாய்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது. இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணையத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும். இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இதன் விற்பனை 22 ஆம் தேதி அன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட விற்பனைக்கு 5000 மொபைல்கள் வந்து உள்ளன. ஆனால் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன.
அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது. இன்று வரை அந்த மொபைலுக்காக இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மொபைலை வாங்கியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை எல்லா கம்பெனிகளின் மொபைல்களை பயன்படுத்தியோரும் இது தான் சிறந்தது என்கிறார்கள்.
2 வது சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் 5 நொடிகளில் விற்று தீர்ந்து விட்டது. அந்த அளவுக்கு இந்த மொபைல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இந்த மொபைலில் நாம் பயன்படுத்தும் அனைத்து தகவல்கள் சைனாவுக்கு அனுப்பபடுகிறது. ஆனால் இது குறித்து நம்மிடம் எந்த அறிவுப்பும் இல்லை. அப்படியானால் இது நம்மை வேவு பார்ப்பதற்கு சமம். இது எதற்காக என்றால் நமது டேட்டாக்களை பேக்கப் எடுப்பதற்கு என்று கூறுகிறார்கள். ஆனால் இது சரியான பதிலாக தெரியவில்லை. என்வே இது குறித்து சியோமி நிறுவனம் தெளிவான பதிலை தர வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.