விடுதிகளில் விபச்சாரம் நடத்துவதால் அடிக்கடி போலிஸ் ரெய்டில் சிக்க வேண்டியுள்ளது என்பதால் விபச்சார கும்பல்கள் புது புது டெக்னிக்குகளை கையாளுகின்றது, சமீபத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் கணவன் மனைவி போல வந்து வீடு வாடகைக்கு என்று தொங்கும் வீட்டு உரிமையாளர்களை அணுகி அவர்கள் கேட்கும் வாடகையை தந்து வீடு எடுத்துவிடுகின்றார்கள், அதன் பின் அங்கே விபச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள், குடியிருப்பு பகுதியில் கணவன் மனைவி போல தங்கியிருப்பதாலும் சென்னை போன்ற நகரங்களில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் இவர்களுக்கு சாதகமாகி விடுகின்றது.
சில நாட்களுக்கு முன் தாம்பரத்தில் கணவன் மனைவி போல வந்து வீடு வாடகைக்கு எடுத்து விபசார விடுதி நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த மும்பை அழகிகள் 2 பேர் மீட்கப்பட்டனர். மேற்குதாம்பரம் சி.டி.ஓ காலனி சாய்நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிக ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்கு சோதனை செய்தனர். அப்போது கணவன் மனைவி போல நடித்து வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதில் விபசார கும்பல் தலைவன் குணா என்பவர் தப்பி சென்றுவிட்டார்.அவரது கூட்டாளி செந்தில் (வயது 46) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.