காஷ்மீரில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்தையடுத்து 200 பேர் பலியானார்கள், 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், காஷ்மீர் மாநில அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் குற்றம் சொல்கின்றனர். இந்நிலையில் வட இந்திய ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பாதிப்பு ஏற்பட்ட முதல் 24 மணி நேரத்திற்கு என்னிடம் அரசாங்கமே இல்லை என்று கூறினார்.
எங்கேயாவது ஒரே ஒரு இயற்கை பேரிடர் மொத்த தலைநகரையும் செயல்படவிடாமல் செய்ததை? பேரிடர் ஏற்பட்ட முதல் நாள் மொத்த தலைநகரும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. தலைமை செயலகம், போலிஸ் தலைமையகம், கன்ட்ரோல் ரூம், ஃபயர் சர்வீஸ் என அத்தனையும் மூழ்கிவிட்டன. செல்போன் இல்லை, தொலைத்தொடர்பு இல்லை இது போல எதுவுமே இல்லாமல் வெறும் 6 பேர் உடன் எனது அறையில் தான் மீட்பு பணி குறித்து செயல்பட ஆரம்பித்தோம், 24 மணி நேரத்திற்கு பின்பே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட என் அமைச்சரவை சகாக்களை தொடர்பு கொள்ள முடிந்தது என்றார். நியாயம் தானே!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.