BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 October 2013

பெப்சி கோக் போன்ற கார்பனைஸ்ட் குளிர்பானங்களை ஆய்வு செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI), அனைத்து வகையான கார்பன் டை ஆக்சைடு வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



குளிர்பானங்களில் கலந்துள்ள ரசாயனங்கள் தொடர்பான முழு விவரங்களை குளிர்பான பாட்டில்களில் ஒட்ட வேண்டும் என்று 2004ல் "பொதுநல வழக்குகள் மையம்' என்ற தொண்டு நிறுவனம் வழக்கு தொடுத்தது, அதில் மக்களை திசை திருப்பும் வகையில் அந்த நிறுவனம் செய்து வரும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது

இந்த வழக்கில் ஆஜரான "பெப்சி' நிறுவன வழக்கறிஞர், பொதுநல மனுவை எதிர்த்ததோடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் போதுமானவையாக உள்ளதாகவும், அவை அனைத்தும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

குளிர்பானங்களில் காணப்படும் தீங்கு விளைவிக்ககூடிய ரசாயனபொருள்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை ஒழுங்குபடுத்த தனியானதொரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டு தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI), அனைத்து வகையான கார்பனைஸ்ட் குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


# பெப்சி, கோக்கிடம் லஞ்சம் வாங்காமல் ஆய்வு செய்வார்களா?



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media