லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என நினைக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, டெல்லியில் அமைக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு ஹெல்ப்லைன் எண்னுக்கு 7 மணி நேரத்திற்குள், 4000 அழைப்புகள் வந்தது.
(011) 27357169 என்ற அந்த ஹெல்ப்லைன் எண் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். அழைப்புகள் ஏராளமாக வந்து குவிந்ததால், அங்கு பணி புரியும் ஊழியர்களும் அதிகரிக்கப் பட்டுள்ளனர். அழைப்பு விடுக்கும் மக்களுக்கு, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எப்படி கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப் படும். இதற்காகவே 15 நிபுணர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகள் மூலம், மக்கள் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி, லஞ்சம் வாங்குவோரை ஆதாரத்துடன், சிக்க வைக்கலாம்.
கேஜ்ரிவாலின் இந்த அதிரடி திட்டதிற்கு பலத்த வரவேற்பு வந்த வண்ணம் இருக்கின்றது.
(011) 27357169 என்ற அந்த ஹெல்ப்லைன் எண் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். அழைப்புகள் ஏராளமாக வந்து குவிந்ததால், அங்கு பணி புரியும் ஊழியர்களும் அதிகரிக்கப் பட்டுள்ளனர். அழைப்பு விடுக்கும் மக்களுக்கு, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எப்படி கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப் படும். இதற்காகவே 15 நிபுணர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகள் மூலம், மக்கள் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி, லஞ்சம் வாங்குவோரை ஆதாரத்துடன், சிக்க வைக்கலாம்.
கேஜ்ரிவாலின் இந்த அதிரடி திட்டதிற்கு பலத்த வரவேற்பு வந்த வண்ணம் இருக்கின்றது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.