சீனாவில் லீ ஹவோ என்ற 36 வயது நபர், தனக்கு சொந்தமான கட்டிடத்தின் அடித்தளத்தில் 6 பெண்களை அடிமைகளாக அடைத்து வைத்து பாலியல் உறவு கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் வயது 16 முதல் 23 வரையாகும். ஆறு பெண்களையும் 2 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை அடைத்து வைத்து தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.
ஆறு பெண்களில் மூவரை வைத்து மற்ற மூன்று பெண்களில் இருவரை லீ ஹவோ கொல்ல வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடைத்து வைத்த பெண்களில் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்கட்டிடத்தில் இருந்து தப்பி வந்து காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து லீ ஹவோ கைது செய்யபட்டார். பின்னர் வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.