BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 January 2014

புலிகள் இல்லாததால், தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்- ராஜபக்சே

இலங்கையின் தமிழர்கள் இருக்கும் பகுதியான‌ வ‌டக்கு மாகாணத்தில், ராணுவத்தினரின் எண்ணிக்கை,70 ஆயிரத்தில் இருந்து  12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. இருப்பினும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், ராணுவத்தினர் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இதற்காக எதிர்ப்புகள் தெரிவித்த வண்ணம் அங்குள்ள மக்கள் இருந்ததால், அப்பகுதியில் ராணுவம் குறைக்கப் பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்ட பின், வடக்கு பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இலங்கையில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் இல்லாததால், தற்போது, மக்களால் நாட்டின் எந்த ஒரு இடத்துக்கும், பயம் இல்லாமல் செல்ல முடிகிறது என்றும் ராஜபக்சே கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media