BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 January 2014

கேஜ்ரிவாலின் தர்ணா வாபஸ் பெறப்படுமா?

கேஜ்ரிவால் தலைமையில் நடந்து வரும் தர்ணாவால், டெல்லி மக்களுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு, அவர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். விதிக்கப்பட்ட தடையையும் மீறி, நேற்றிலிருந்து நடைப்பெற்று வரும் இந்த போராட்டத்திற்கு, கண்டனங்கள் பல தரப்புகளில் இருந்து அதிகரித்து வருகிறது.

இதைப் பற்றி கிரண் பேடி பேசுகையில், "கேஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் அராஜகத்தையும் சட்ட ஒழுங்கு சீர்குலைவையுமே அதிகரிக்க செய்து வருகின்றனர். இது அழிவுக்குரியது. நிறுவனங்களின் மரியாதைகளை அவமதிக்கிறார்கள். கேஜ்ரிவால் தம்மை அராஜகவாதியாக அழைத்துக் கொள்வது கவலைக்குரியது.", என்று கூறினார்.

 இந்நிலையில், இன்று  மாலை தனது அமைச்சர்களுடன் தனது மாருதி வேகன் ஆர் காருக்குள் அமர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தினார். இதனால் போராட்டம் வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media