BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 January 2014

நாடகத்தை நிறுத்தி விட்டு, நிர்வாகத்தை பாருங்கள் கேஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால், நாடகம் நடத்துவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் நிருபம் வலியுறுத்தியிருக்கிறார்.

நேற்று மும்பையில், நிருபர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் நிருபம், " கெஜ்ரிவால் முதலில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர் (கெஜ்ரிவால்) ஒரு முதலமைச்சர் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகளை மத்திய அரசுடன் எளிதில் கலந்து பேசி விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம்." என்று கூறினார்.

டெல்லியில் நேற்று, விதிக்கப்பட்ட தடையை மீறி, கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியினரும், உள்துறை அமைச்சர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் டெல்லி மக்களுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டது.

"நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஆம் ஆத்மி கட்சியினர்,  போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நிர்வாகதிறனில் போதிய அனுபவமும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லை என்பது தெரியவருகிறது." என்று சஞ்சய் நிருபம் கருத்து தெரிவித்தார்.












Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media