BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 January 2014

போராட்டத்தில் இருந்து கொண்டே கோப்புகள் பார்க்கும் கேஜ்ரிவால், கிண்டலடிக்கும் பா.ஜ.க‌

பத்து நாட்கள் போராட்டத்தை அறிவித்த கேஜ்ரிவால், தான் இருக்கும் இடத்தில் இருந்தே தன் முதல் அமைச்சர் பணிகளை தொடர்வேன் என்று கூறியுள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கே, ஏராளமான கோப்புகள் வந்து இறங்கி இருக்கின்றன. கேஜ்ரிவாலும், அவரது ஆறு அமைச்சர்களும் போராட்டத்தில் இருந்து கொண்டே அந்த கோப்புகளை பார்த்து வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் தனது பணிகள் பாதிக்கப்படவில்லை என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதை பற்றி பேசுகையில், பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜெட்லி, " ஆம் ஆத்மியினருக்கு தலைமைச் செயலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை விட தெருவில் இருப்பதே ரொம்பப் பிடித்துள்ளதாக தெரிகிறது." என்று கிண்டலாக கூறியுள்ளார்.

"கெஜ்ரிவால் அறிவித்துள்ள தர்ணா போராட்டம் தேவையற்றது. கும்பல்கள் கூடி முடிவுகளை எடுக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. திறமையான அரசு நடத்துவோருக்கு முறையான நிர்வாகமே தேவை. மக்கள் சேவகர்களாக இருப்பது எப்படி முக்கியமோ, அதேபோல மக்களுக்கான அரசை திறம்பட நடத்துவதும் முக்கியம்" என்று கூறியுள்ளார் ஜேட்லி.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media